
ஈரோடு: எனக்கு கடிதம் எழுதியதற்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆதாரம் இருக்கிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயிலில், ஆடிப்பெருக்கையொட்டி நடந்த ஹோமம் மற்றும் சிறப்பு பூஜையில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
சொத்து வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துஉள்ளது. தேர்தல் நெருங்குவதால்தற்போது அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதாக கூறுகின்றனர்.