
தூத்துக்குடி: சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கு.செல்வப்பெருந்தகை கூறினார். நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் வீடு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் உள்ளது. இங்கு வந்த செல்வப்பெருந்தகை கவின் செல்வகணேஷின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கல்வியில் சிறந்து விளங்கிய இளைஞரை படுகொலை செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவேதான் சாதிய வன்கொடுமை படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் சட்டப்பேரவையைக் கூட்டி இந்த சட்டத்தை இயற்ற வேண்டும்.