
வாராணசி: பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 20-வது தணையாக 9.7 கோடி விவசாயிகளுக்கு நேற்று சுமார் ரூ.20,500 கோடி விடுவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இதனை விடுவித்தார்.
கடந்த 2019-ல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.6,000 செலுத்தப்படுகிறது. இது தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 19 தவணைகளில் விவசாயிகளுக்கு சுமார் ரூ.3,69,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.