
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் சாந்தா பால். பகுதி நேரமாக மாடலிங் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்தியாவில் வசித்து வந்ததாக இவரை கடந்த செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சாந்தா பால், கடந்த 2016-ல் ஆண்டு இந்தியா – வங்கதேசம் இடையிலான அழகிப் போட்டியல் வங்கதேசம் சார்பில் பங்கேற்றார். 2019-ல் இவர் ஆசிய அழகிப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். மாடலிங் துறையில் வெற்றியை தொடர்ந்து, அவர் நடிப்புத் தொழிலுக்கு மாறினார். இறுதியில் வங்கதேச விமான நிறுவனம் ஒன்றில் சேர்ந்தார். இவர், கடந்த 2023-ல் வங்கதேசத்தின் பாரிசாலில் இருந்து அந்நாட்டு பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்தார். கொல்கத்தாவில் ஒரு சொத்து முகவர் மூலம் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்தார்.