
புதுடெல்லி: ‘‘வேளாண் சட்டங்கள் தொடர்பாக என் தந்தை அருண் ஜெட்லி மிரட்டியதாக ராகுல் காந்தி கூறுவது தரமற்ற சிந்தனை’’ என்று ரோஹன் ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் சட்டப் பிரிவு ஆண்டு மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்த போது, அவற்றை நான் கடுமையாக எதிர்த்தேன். அப்போது நடந்த சம்பவம் எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி என்னை மிரட்டினார். வேளாண் சட்டங்களை தொடர்ந்து எதிர்த்தாலோ, மத்திய அரசை எதிர்த்து பேசினாலோ, என் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அருண் ஜெட்லி மிரட்டினார்.