
சென்னை: ‘படிக்கும் காலத்திலேயே மாணவர்களுக்கு விவசாயம் குறித்த சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்’ என்று ஐஐடி மாநாட்டில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
சென்னை ஐஐடி மற்றும் ‘வி தி லீடர்ஸ் பவுண்டேஷன்’ என்ற அமைப்பின் சார்பில் இளையோர் வேளாண் மாநாடு நேற்று நடை பெற்றது. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், ‘வி தி லீடர்ஸ் பவுண்டேஷன்’ அமைப்பின் தலைமை ஊக்குவிப்பாளருமான அண்ணாமலை, இத்திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய தாவது: இந்திய பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மையின் பங்கு மிகக் குறைவாக இருக்கிறது. அதை மாற்றக்கூடிய முயற்சியாகத்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இயற்கை வேளாண் பொருட்களைத் தேடி வாங்கும் அளவுக்கு மக்க ளிடையே மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.