
சென்னை: “உலகத்திலேயே, தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால், இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக்கிறார்கள்” என்று அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில், இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியது: “உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால், இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக்கிறார்கள். இது குறித்து காவல் துறையிடமும், சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடமும் புகார் கொடுத்துள்ளோம். அந்தக் கருவியையும் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளோம். மேலும், நான் தனியாக தனியார் சிறப்பு அமைப்பு மூலமாகவும் விசாரணை நடத்தச் சொல்லியுள்ளேன். அவர்களும் விரைவில் அறிக்கை கொடுப்பார்கள்.