• August 2, 2025
  • NewsEditor
  • 0

2025 ஆகஸ்ட் 22-ம் தேதி சேலம் குகை ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக…

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

விளக்கு பூஜை

சேலம் மாநகரின் குகை பகுதியில் காளியம்மன் தெருவில் (சந்திரா பனியன் அருகில்) பல 100 ஆண்டுகளைக் கடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. சேலத்தின் காவல் தெய்வமாக இன்று வரை ஆட்சி செய்து வருகிறாள். சக்தி, சாமுண்டா, ஜோதி ஆகிய முப்பெரும் தேவியரின் இணைந்த வடிவமாக சௌடேஸ்வரி அம்மன் வணங்கப்படுகிறாள். மிகவும் துடியான தெய்வமான இவளை வணங்கி நீதி கேட்டால் நிச்சயம் நியாயம் வழங்குவாள் என்கிறார்கள் இவள் பக்தர்கள். இங்கு வந்து நோய், கடன், வழக்கு, காரியத்தடைகள் நீக்கியவர் அநேகம்.

புராண காலத்தில் இங்குள்ள மக்களை வஜ்ர முஷ்டி, தூம் ராட்சன், தூம்ர வக்கிரன், பஞ்சசேனன், சித்ரேசனன் எனும் அசுரர்கள் தாக்கிக் கொடுமை செய்தனர். தேவலர் மக்கள் மிக வீரத்துடன் போரிட்டும் அவர்களால் அசுரர்களை வெல்ல முடியவில்லை. அப்போது ஆதி பராசக்தியின் வடிவமான சௌடேஸ்வரி அம்மன் அங்கு தோன்றி அந்த அசுரர்களை கொன்றாள் என்கிறது புராணம். அன்றிலிருந்து அசுரர்களை எதிர்த்துப் போரிட்ட மக்கள், வீரகுமாரர்கள் என்று தேவியின் பிள்ளைகளாக மாறினர். அவர்கள் வம்சாவழி குலத்தினரே இந்த அம்மனின் ஆலயத்தை நிர்வகிப்பதும் கத்தி போடுதல் எனும் சம்பிரதாயத்தை செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

விளக்கு பூஜை

வேண்டியவரின் குறைகளை எல்லாம் தீர்த்து வைப்பவள் இந்த சௌடேஸ்வரி அம்மன். அதுவும் இவளை வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டால் வேண்டியது எல்லாம் நிறைவேறும் என்பது ஐதிகம். எனவே 2025 ஆகஸ்ட் 22-ம் தேதி சேலம் குகை ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. சக்தி விகடனும் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் தேவாங்க குல சமூக நல டிரஸ்ட் மற்றும் ஸ்ரீமாரியம்மன் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் வீரக்குமாரர்கள் குழுவும் இணைந்து இந்த திருவிளக்கு பூஜையை நடத்த உள்ளது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம்.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

பல்வேறு சிறப்புகளை உடைய இந்தத் தலத்தில் பெண்கள் திருவிளக்கேற்றி வழிபாடு செய்கிறபோது சகல நன்மைகளும் உண்டாகும். ‘கடன்கள் தீரும்’ ‘திருமண வேண்டுதல்கள் பலிக்கும்; சௌடேஸ்வரி அம்மனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்’ என்கிறார்கள் பக்தர்கள்.

உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.

விளக்கு பூஜை

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *