• August 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக அரசு சார்​பில் ஏற்​கெனவே தொடங்​கப்​பட்​டுள்ள “உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் இன்று (ஆக.2) புதி​தாக தொடங்​கப்​பட​வுள்ள ‘நலம் காக்​கும் மருத்​து​வம்’ போன்ற அரசின் திட்​டங்​களில் ‘உயிருடன் வாழும்’ அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களை பயன்​படுத்த தடை விதிக்​கக்​கோரி அதி​முக எம்​.பி. சி.​வி.சண்​முகம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு பிறப்பித்த உத்தரவு: உச்ச நீதி​மன்ற உத்​தர​வு​களின்​படி அரசு சார்​பில் ஏற்​கெனவே தொடங்​கப்​பட்​டுள்ள திட்​டங்​கள் மற்​றும் புதிதாக தொடங்​கப்​பட​வுள்ள திட்​டங்​களில் தமிழக முதல்​வரின் புகைப்​படத்தை மட்​டும் பயன்​படுத்​திக் கொள்​ளலாம். ஆனால் உயிருடன் வாழும் அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களை அரசி்ன் திட்​டங்​களில் பயன்​படுத்​தக் கூடாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *