• August 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கல்​வித் துறை​யில் பல்​வேறு சீர்​திருத்​தங்​களில் ஈடு​பட்ட மூத்த கல்​வி​யாள​ரும், முன்​னாள் துணைவேந்​தரு​மான வே.வசந்​தி தேவி சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 87. வசந்தி தேவி 1938-ம் ஆண்​டில் திண்​டுக்​கல்​லில் பிறந்தார். ராணி மேரி கல்​லூரி​யில் பேராசிரியை பணி​யில் சேர்ந்த அவர், 1988 முதல் 1990-ம் ஆண்டு வரை கும்​பகோணத்​தில் உள்ள அரசு மகளிர் கல்​லூரி​யின் முதல்​வ​ராக பணி​யாற்​றி​னார்.

1992 முதல் 1998-ம் ஆண்டு வரை இவர் மனோன்​மணீ​யம் சுந்​தர​னார் பல்​கலைக்​கழக துணைவேந்​த​ராக பணி​யாற்​றி​னார். அதன்பின் 2002 முதல் 2005 ம் ஆண்டு வரை தமிழகத்​தின் மாநில மகளிர் ஆணை​யத்​தின் தலை​வ​ராக​வும் இருந்​தார். குறிப்​பாக 1980-களின் இறு​தி​யில் உசிலம்​பட்டி பெண் சிசுக்​கொலைகளை, களத்​துக்​குச் சென்று தரவு​களோடு ஆவணப்​படுத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *