• August 2, 2025
  • NewsEditor
  • 0

பெங்​களூரு: கர்​நாட​கா​வில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்ற முன்​னாள் எழுத்​தர் ஒரு​வரின் வீட்​டில் லோக் ஆயுக்தா அதி​காரி​கள் நடத்​திய சோதனை​யில் 24 வீடு​கள், 4 வீட்டு மனை​கள், 40 ஏக்​கர் நிலம் ஆகிய​வற்​றின் ஆவணங்​களும், ரூ.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்​ளிப் பொருட்​கள், 4 வாக​னங்​களும் சிக்​கின.

கர்​நாடக மாநிலம் கொப்​பல் மாவட்​டத்​தில் ஊரக மேம்​பாட்டு வாரி​யத்​தில் எழுத்​த​ராக பணி​யாற்​றிய காளகப்பா நித‌குன்ட்டி வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து குவித்​த​தாக லோக் ஆயுக்தா போலீ​ஸாருக்கு புகார் வந்​தது. அவர் தற்​காலிக ஊழிய​ராக மாதம் ரூ.15 ஆயிரம் ஊதி​யம் பெற்​று​வந்த நிலை​யில், முன்​னாள் அரசு பொறி​யாளர் சின்​சோல்​கருடன் இணைந்து ரூ.75 கோடி மதிப்​பிலான அடிப்​படை கட்​டமைப்பு திட்​டங்​களை மேற்​கொள்​வ​தாக ஒப்​பந்​த​தா​ரர்​களிடம் பணம் வசூலித்​த​தாக​வும் அதில் குற்​றம் சாட்​டப்​பட்​டிருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *