
கோவில்பட்டி: தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்யுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப்பயணத்துக்காக நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி வந்த பழனிசாமி நேற்று காலை செண்பகவல்லி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.
பின்னர், தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பரமசிவம் பேசும்போது, “கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். தீப்பெட்டி தொழிலுக்கு அச்சுறுத்தலாக உள்ள, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களை தடை செய்ய வேண்டும்.