
கரூர்: கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை உயர்மின் விளக்கு கோபுரத்தில் ஏறி போராடிய நடத்துநர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (58). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கரூர் கிளை 2-ல் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வழித்தடத்தில் பணியாற்றும்போது பரிசோதகர்கள் நடத்துநரின் பணப்பையை சோதித்துள்ளனர்.