
பந்தலூர் அருகேயுள்ள நச்சேரி காட்டுநாயக்கர் பழங்குடியினர் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் வீடுகட்ட அரசின் உத்தரவு கிடைத்தும், வீடு கட்ட முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யன்கொல்லி எருமாடு செல்லும் சாலையில் நச்சேரி என்ற கிராமத்தில் பண்டைய பழங்குடியினரான காட்டுநாயக்கர் மக்கள், 20 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் செல்லும் சாலையில் முகப்புப் பகுதியில் தனியார் சாலை என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.