
தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங் கலத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கவின் செல்வ கணேஷ் (27). இவர், கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாதி மாறி காதலித்ததால் நடந்த இந்த கொலை தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.