
தமிழகத்தில் ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலானவை குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்துகள் நிகழ்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாகன ஓட்டிகள் குடித்திருக்கிறார்களா என, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், காவல் துறை கடமைக்காக ஆய்வு செய்கின்றன.
ஆனால், பாரம் ஏற்றி வரும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுதான் ஏற்றப்பட்டிருக்கிறதா என எளிதாக சோதிக்க முடியும். வட்டார போக்குவரத்து துறையினர், காவல் துறையினர் தங்கள் பணியை சரியாக செய்தால், சாலை விபத்துகள் தவிர்க்கப்படும். ஆனால், இந்த இரு துறைகளும் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி, தங்கள் வருவாயை மட்டும் அதிகரித்து கொள்கின்றன.