• August 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​யங்​களில் ஒன்​றான எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில், ரூ.734.91 கோடி மதிப்​பில் மறுசீரமைப்பு பணி நடை​பெறுகிறது. இங்கு பன்​னடுக்கு வாகன நிறுத்​து​மிடம், வணிக வளாகம் அமைக்​கும் பணி, பார்​சல் அலு​வல​கக் கட்​டிடப் பணி என பல்​வேறு பணி​கள் நடை​பெறுகின்​றன. இதுத​விர, ரயில் நிலை​யத்​தில் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை இணைக்​கும் வித​மாக, நடைமேம்​பாலம் அமைப்​ப​தற்​காக ஆரம்​பக் கட்​டப்​பணி​கள் தொடங்​கின.

இதற்​காக, ரயில் நிலை​யத்​தின் 1, 2-வது, நடைமேடைகள் ஜூன் முதல் வாரத்​தில் மூடப்​பட்​டன. இதைத் தொடர்ந்​து, 3, 4-வது நடைமேடைகள் மூடப்​பட்​டன. இதன் காரண​மாக, சென்னை எழும்​பூர்- மதுரை இடையே இயக்​கப்​பட்ட தேஜஸ் விரைவு ரயில், மன்​னார்​குடிக்கு இயக்​கப்​பட்ட மன்னை விரைவு ரயில் உள்பட 6 ரயில்​கள் தாம்​பரம் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *