
சென்னை: சென்னையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக கவுன்சிலர்கள் `ஓரணியில் தமிழ்நாடு' என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் பலர், “சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. ரிப்பன் மாளிகை வளாகத்திலேயே ஏராளமான நாய்கள் உள்ளன. இவை பொதுமக்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.