
புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: பிஹார் முதல்வராக பதவியேற்றதிலிருந்து சுகாதார சேவைகளை மேம்படுத்த விரிவான முயற்சிகளை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.
கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் ஆஷா (சமூக நலப் பணியாளர்கள்) மற்றும் மம்தா (மகப்பேறு பணியாளர்கள்) பணியாளர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.