
சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சியின் 1,260 இடங்களில் உள்ள 10,000 பொதுக் கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.620 கோடியும், ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் ஆகிய இரண்டு மண்டலங்களில் உள்ள பொதுக் கழிவறைகளைத் தனியார்மயமாக்குவதற்கு ரூ.430 கோடியும் என திமுக ஆட்சியில் இதுவரை சுமார் ரூ.1000 கோடி செலவிடப்பட்டும் பொதுக் கழிவறைகளின் தரம் மிக மோசமாக உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
தற்போதுள்ள முக்கால்வாசி பொதுக் கழிவறைகள் தண்ணீர், கதவு, தாழ்ப்பாள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தரையெல்லாம் கறைபடிந்து, துர்நாற்றம் வீசுகின்றன என்பது திமுக அரசின் ஊழல் முகத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.