
சென்னை: பொருளாதாரம் மிகவேமாக வளர்ந்து வருவதால் இந்தியாவில் கண்காட்சி தொழிலுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய சுற்றுலாத் துறை கூடுதல் செயலர் சுமன் பில்லா தெரிவித்தார். இந்திய கண்காட்சி தொழில் சங்கம் சார்பில், “இந்தியாவில் கண்காட்சி, கூட்டம், கருத்தரங்கு நடத்தும் தொழில்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவது” என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.
இக்கருத்தரங்கை, மத்திய சுற்றுலாத் துறை கூடுதல் செயலர் சுமன் பில்லா தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் தொழில்துறை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. சாலை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் பிரமிக்கதக்க வகையில் மேம்பாடு அடைந்துள்ளன.