• July 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சவுக்கு சங்​கர் மீதான வழக்கை 6 மாதங்​களுக்​குள் விசா​ரித்து முடிக்க வேண்​டும் என விசா​ரணை நீதி​மன்​றங்​களுக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தன்​னுடைய யூடியூப் சேனல் செயல்பட காவல் ஆணை​யர் அருண் தடை​யாக இருப்ப​தாக கூறி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் சவுக்கு சங்​கர் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி பி.வேல்​முருகன் முன்பு விசா​ரணைக்கு வந்​த​போது, “கருத்து சுதந்​திரத்தை நல்ல நோக்​கத்துக்காகவே பயன்​படுத்த வேண்​டுமே தவிர அதை மிரட்​டும் நோக்​கில் பயன்​படுத்த கூடாது. வழக்கு நீதி​மன்ற விசா​ரணை​யில் உள்​ள​போது ஊடக விசா​ரணை மேற்​கொள்​வது சரி​யானது அல்ல. இது தொடர்​பாக சவுக்கு சங்​கருக்கு உரிய அறி​வுரையை அவர்தரப்பு வழக்​கறிஞர் வழங்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *