
சென்னை: சவுக்கு சங்கர் மீதான வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னுடைய யூடியூப் சேனல் செயல்பட காவல் ஆணையர் அருண் தடையாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “கருத்து சுதந்திரத்தை நல்ல நோக்கத்துக்காகவே பயன்படுத்த வேண்டுமே தவிர அதை மிரட்டும் நோக்கில் பயன்படுத்த கூடாது. வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளபோது ஊடக விசாரணை மேற்கொள்வது சரியானது அல்ல. இது தொடர்பாக சவுக்கு சங்கருக்கு உரிய அறிவுரையை அவர்தரப்பு வழக்கறிஞர் வழங்க வேண்டும்.