
சென்னை: விழுப்புரம் அருகே மகப்பேறு சிகிச்சையின்போது கர்ப்பிணியை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதால் சிசு உயிரிழந்த புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை முறையாக தாக்கல் செய்ய பொதுசுகாதாரத் துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசை மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த கே.தேவமணி என்பவர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டு கர்ப்பிணியான எனது மகளை முருக்கேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தேன்.