
சென்னை: திருவள்ளூரில் கூடுதல் ரயில்களை நிறுத்தக் கோரி, தெற்கு ரயில்வேக்கு 150-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. 1,000 மின்னஞ்சல்களை அனுப்ப இலக்கு வைத்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் முக்கிய ரயில் நிலையமாக, திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் 60-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் செல்கின்றன. இருப்பினும், நிறுத்தம் இல்லாததால், பயணிகள் விரைவு ரயில்களின் சேவையைப் பெற முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.