
புதுடெல்லி: “பஹல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று ஏன் கருத வேண்டும்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறி இருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது.” என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார். பாகிஸ்தானை காப்பாற்றுவதன் மூலம் அவருக்கு என்ன கிடைக்கும் என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் இப்படிச் சொல்வதன் அர்த்தம், பாகிஸ்தான் குற்றமற்ற நாடு என்பதாகும். அவர் யாரைக் காப்பாற்ற விரும்புகிறார்? பாகிஸ்தானைப் பாதுகாப்பதால் அவருக்கு என்ன லாபம்?