
புதுடெல்லி: பிஹாரில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் சிறப்பு திருத்தப் பணி மேற்கொண்டது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹாரில் சமீபத்தில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல் மட்டுமே. என்றாலும் இதனை இறுதிப் பட்டியல் என்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.