
சென்னை: தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் வரை ஓயமாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 'மக்களைக் காப்போம்- தமிழகத்தை மீட்போம்' என்ற பயணத்தில் சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறேன்.
அவர்களைப் பார்த்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, அவர்களின் மனநிலையை அறிந்தேன். பொதுமக்கள் அனைவருமே ஸ்டாலினின் மக்கள் விரோத ஆட்சியில், அவர்கள் சந்தித்து வரும் வேதனைகளை எடுத்துரைத்தனர்.