
புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் நேற்று தொடங்கியது. தோல்வியை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதால் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இதில், வெளிநாட்டு அழுத்தம் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.