
புதுடெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்துவதே அரசின் முதன்மையான இலக்காக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மத்திய அரசைப் பொருத்தவரையில் பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்துவது, அதற்கு தேவையான ஆதரவுகளை வழங்குவது ஆகியவற்றை முதன்மை யான இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.