
மும்பை: மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகையை 14 ஆயிரம் ஆண்கள் பெற்று வருவது தணிக்கையில் தெரிய வந்துள்ளது மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்படி 21 முதல் 65வயதுக்குட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனிடையே, தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதற்கு இந்த திட்டம் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.