
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று (திங்கள்கிழமை) விவாதம் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார், ஆனாலும் அமளி தொடர்ந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.