
சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளின் அருகிலேயே இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். சென்னை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளிவளாகத்ததில் “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்வரால் தொடங்கப்படவுள்ளது.
இதையொட்டி, பள்ளி வளாகத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரத்துறை செயலர் ப.செந்தில் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.