
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
அதில், “இந்திய கலாச்சாரத்தின் மிகப் பெரிய ஆதாரம் நமது பண்டிகைகளும், நமது பாரம்பரியங்களும்தான். பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டிருக்கும் ஞானம் நமது மிகப்பெரிய சொத்தாகும். இந்த ஓலைச்சுவடிகளில் விஞ்ஞானம் உள்ளது, சிகிச்சை முறைகள் உள்ளன. இசை, தத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.