
ராமேசுவரம் / சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 10-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
நாட்டின் 11-வது குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் தனது பதவிக் காலத்துக்குப் பின்னர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசி, மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார்.