
கும்லா/ ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
வட மாநிலங்களில் குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாவோயிஸ்ட்கள் இல்லாத நாட்டை உருவாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.