• July 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக முதல்​வருமான மு.க.ஸ்​டா​லின் கடந்த 21-ம் தேதி காலை​யில் வழக்​க​மான நடைப​யிற்சி மேற்​கொண்ட போது அவருக்கு லேசான தலைச் சுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, காலை 10.50 மணி​யள​வில் அவர் சென்னை ஆயிரம்​விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலை​யில் உள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அங்கு அவருக்கு பல்​வேறு மருத்​துவ பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. கடந்த 24-ம் தேதி மேற்​கொள்​ளப்​பட்ட கூடு​தல் பரிசோதனை​யில் அவருடை தலைசுற்​றல் பிரச்​சினைக்​கு, அவரது இதய துடிப்பு சீரற்று இருந்​ததே காரணம் என்​பது தெரிய​வந்​தது. இதய இடை​யீட்டு சிகிச்சை நிபுணர் ஜி.செங்​கோட்​டு​வேலு தலை​மையி​லான மருத்​து​வர் குழு​வினர் முதல்​வருக்கு இதய துடிப்பை சீராக்​கு​வதற்​கான சிகிச்​சையை மேற்​கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *