• July 28, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு, ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கோர்ட்யார்ட் மாரியார்ட் ஓட்டலில் பிரதமர் தங்கினார்.

தொடர்ந்து, நேற்று காலை 11.10 மணியளவில் ஓட்டலில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். மேஜர் சரவணன் சாலை, பாரதிதாசன் சாலை, தலைமை அஞ்சல் நிலைய ரவுண்டானா, குட்ஷெட் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம் வழியாக சென்று 11.31 மணிக்கு விமான நிலையம் சென்றடைந்தார். வழிநெடுகிலும் சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் பாஜக, அதிமுக கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரண்டு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். காரில் இருந்தவாறு அவர்களை பார்த்து பிரதமர் கையசைத்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *