
சென்னை: பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்புகாரில் மகளிர் மாநாடு நடத்துவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், கட்சி தலைவர் அன்புமணி ‘உரிமை மீட்பு பயணம்’ நடத்தப்போவதாக அறிவித்து, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நேற்று முன்தினம் இந்த நடைபயணத்தை தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை சுட்டிக்காட்டி அன்புமணியின் நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று டிஜிபிக்கு கடிதம் அனுப்பினார்.