
சென்னை: கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி சட்டவிதிகளைப் பின்பற்றியே கோயில் நிலத்தில், கோயில் நிதியைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் கோயில் நிதியில் இருந்து பல்வேறு கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மயிலாப்பூரைச் சேர்ந்த ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான டி.ஆர். ரமேஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளக்கூடாது எனக் கூறி தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட்டது.