
புதுடெல்லி: டெல்லியில் பழைய வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடை நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கும் என்பதால், இந்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பபட்டன. பிஎஸ்-6 தரச்சான்றிதழ் பெற்ற வாகனங்கள் பிஎஸ்-4 வாகனங்களை விட குறைவான காற்று மாசுவை வெளியிடுவதால், 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்கள். 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்கள் இயக்கப்படுவதற்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: