
சென்னை: “முதல்வர் ஸ்டாலின் ஏன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லவில்லை. அங்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை இல்லையா?” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடிக்கு புறப்படும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கூறியது: “தமிழகம் பற்றி முதல்வர் ஸ்டாலின் சிந்திப்பதைவிட, பிரதமர் மோடி அதிகம் சிந்திக்கிறார். ‘வீடு வீடாக சென்று, பாஜக நிதி தரவில்லை என்பதை கூறுங்கள்’ என்றார் ஸ்டாலின். அதேபோல, பிரதமர் மோடி இப்போது ரூ.4,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்பதையும் வீடு வீடாக சென்று கூறுங்கள்.