
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், “தேர்தல் அறிக்கையில் கூறியபடி சம வேலைக்கு சம சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் வரும் செப்டம்பர் மாதம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்” என்று அவர் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால், சுமார் 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.