
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேர் முதியோர் இல்லங்கள் அல்லது ஆதரவற்றோர் விடுதிக்குச் சென்று அங்கிருப்பவர்களுடன் தங்களது நேரத்தை செலவழிப்பதுடன், தங்களது சந்த பணத்தில் ஸ்பெஷல் மதிய உணவு அல்லது இரவு உணவு வாங்கிக்கொடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பட்டுதேவானந்த் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மற்றம் வேலூர் மாவட்டத்தில் தற்காலிக அரசு வாகன ஓட்டுநர்களாக பணிபுரிந்த சி.சின்னதம்பி, எம். கிருஷ்ணமூர்த்தி, பி.ஆனந்தன் ஆகியோரை பணிநிரந்தரம் செய்ய கடந்த 2021-ம் ஆண்டு செப்.29-ம் தேதி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் உத்தரவிட்டிருந்தார்.