• July 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சேக்​கிழார் ஆராய்ச்சி மையம் சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. பல்​வேறு ஆதீன கர்த்​தர்​கள் பங்​கேற்​றனர். சேக்​கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்சி பல்​கலைக்​கழகம்சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்னை திரு​வான்​மியூர் ராமச்​சந்​திரா கன்​வென்​ஷன் மையத்​தில் நடந்து வரு​கிறது.

2-ம் நாள் விழா நேற்று நடை​பெற்றது. இந்நிகழ்ச்​சி​யில் தரு​மபுரம் ஆதீனம் 27-வது குரு​மகா சந்​நி​தானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பரமாச்​சா​ரிய சுவாமிகளின் மணி விழா நடை​பெற்​றது. தொடர்ந்​து, தருமை ஆதீன புல​வர் சி.அருணைவடி வேல் எழு​திய ‘தென்​றமிழ் பயன்’ நூல் வெளி​யிடப்​பட்​டது. நூலின் முதல் பிர​தியை தரு​மபுரம் ஆதீனம் வெளி​யிட, திருக்​கயி​லாய பரம்​பரை திரு​வண்​ணா​மலை ஆதீனம் 46-வது குரு​மகா சந்​நி​தானம் குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார் பெற்​றுக்​கொண்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *