
சென்னை: சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்கிழார் விழா சென்னையில் நடைபெற்றது. பல்வேறு ஆதீன கர்த்தர்கள் பங்கேற்றனர். சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்சார்பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்கிழார் விழா சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடந்து வருகிறது.
2-ம் நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் மணி விழா நடைபெற்றது. தொடர்ந்து, தருமை ஆதீன புலவர் சி.அருணைவடி வேல் எழுதிய ‘தென்றமிழ் பயன்’ நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை தருமபுரம் ஆதீனம் வெளியிட, திருக்கயிலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகா சந்நிதானம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக்கொண்டார்.