
சென்னை: மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற் பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாயை மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குநரான தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் உள்பட 3 பேர் மூன்றாவது முறையாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.