
புதுடெல்லி: மதங்களுக்கு இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கான பேச்சுவார்த்தையை, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் தொடங்கி வைத்தார். டெல்லி ஹரியானா பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சுமார் 50 முஸ்லிம் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபல், சிறுபான்மை பிரிவு தலைவர் இந்திரேஷ் குமார், இணை செயலாளர்கள் கிருஷ்ண கோபால் மற்றும் ராம்லால் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.