• July 26, 2025
  • NewsEditor
  • 0

வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக கடந்த ஒரு வருடத்தில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார் பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான சத்யா பன்னீர்செல்வம். ஆளும் கட்சி மட்டுமல்லாது சொந்தக் கட்சியினரும் சத்யாவின் வளர்ச்சியை ரசிக்கவில்லை. அதனால் தான் அவரை சுற்றிச் சுற்றி அடிக்கிறார்கள் என்கிறார்கள் சத்யாவின் ஆதரவாளர்கள்.

சத்யா பன்​னீர்​செல்​வம் 2016-ல் பண்​ருட்டி எம்​எல்​ஏ-​வாக தேர்​வான நாளில் இருந்தே அவருக்​கும் கடலூர் வடக்கு மாவட்ட அதி​முக செய​லா​ள​ரான முன்​னாள் அமைச்​சர் எம்​.சி.சம்​பத்​துக்​கும் அவ்​வள​வாய் ஒத்​துப்​போக​வில்​லை. மணல் பிரச்​சினை​யில் இவர்​களுக்​குள் ஏற்​பட்ட மனக்​கசப்பு மல்​லுக்​கட்​டாக மாறிய​தால் 2021 ஏப்​ரலில் சத்யா பன்​னீர்​செல்​வத்​தைக் கட்​சியி​லிருந்தே நீக்​கி​னார் இபிஎஸ். அப்​போதே, “எம்​.சி.சம்​பத், (சிதம்​பரம்) எம்​எல்​ஏ-​வான பாண்​டியன், சொரத்​தூர் ராஜேந்​திரன் ஆகி​யோரை நான் வணங்​கும் சிவனும் ஜெயலலி​தா​வின் ஆன்​மா​வும் ஒரு​போதும் மன்​னிக்​காது” என சாபம் விட்​டார் சத்யா பன்​னீர்​செல்​வம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *