• July 26, 2025
  • NewsEditor
  • 0

கும்பகோணம்: தமிழ்​நாடு பிராமணர்​கள் சங்க மாநிலத் துணைத் தலை​வர் கார்த்​தி​கேயன் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: திரு​வாரூருக்கு வந்த அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிச்​சாமி​யிடம், பிராமணர்​களுக்கு இடஒதுக்​கீடு வழங்​கி, நல வாரி​யம் அமைக்க வேண்​டும். கும்​பகோணம் தொகு​தியை பிராமணருக்கு ஒதுக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​யுள்​ளோம்.

அவர் வரும் தேர்​தலில் எங்​கள் கோரிக்​கையை நிறைவேற்​று​வார் என நம்​பு​கிறோம். அப்​படி அவர் அறி​வித்​தால், தமிழகத்​தில் உள்ள 45 லட்​சம் பிராமணர்களும் அவருக்கு ஆதரவு அளிப்​போம். அதே​நேரத்​தில், எங்​களது கோரிக்​கை​யை, திமுக தேர்​தல் அறிக்​கை​யில் அறி​வித்​தா​லும் மகிழ்ச்​சி​யுடன் ஏற்​றுக்​கொள்​வோம். ஆனால், திமுகவை ஆதரிப்​பது என்​பது, அப்​போதுள்ள மனநிலை​யைப் பொறுத்​த​தாகும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *