• July 26, 2025
  • NewsEditor
  • 0

காரைக்குடி: பழங்​குடி மக்​களை தாக்​கும் ‘சிக்​கிள் செல் அனீமி​யா’ என்ற அரிய நோய்க்கு குறைந்த செல​வில் மருந்து கண்​டு​பிடிக்கப்​பட்​டுள்​ள​தாக சிஎஸ்​ஐஆர் தலைமை இயக்​குநர் என்​.கலைச்​செல்வி கூறி​னார். மத்​திய அறி​வியல் மற்​றும் தொழிலக ஆய்வுக் குழு​மத்​தின் கீழ் (சிஎஸ்​ஐஆர்) காரைக்​குடி​யில் செயல்​பட்டு வரும் மத்​திய மின் வேதி​யியல் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் (செக்ரி) 78-வது ஆண்டு விழா நேற்று நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற சிஎஸ்​ஐஆர் தலைமை இயக்​குநர் என்​.கலைச்​செல்​வி, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சத்​தீஸ்​கர், ஒடிசா, பிஹார், மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட மாநிலங்​களில் பழங்​குடி மக்​களை ‘சிக்​கிள் செல் அனீமி​யா’ என்ற அரிய​வகை நோய் தாக்கு​கிறது. இதற்​கான மருந்து கண்​டு​பிடிக்​கும் ஆராய்ச்​சி​யில் சிஎஸ்​ஐஆர் கடந்த 8 ஆண்​டு​களாக ஈடு​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *