
சென்னை: வங்கி மோசடி புகார் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் திருப்பி ஒப்படைக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற ரூ.30 கோடி கடன் தொகையை தனது சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதால் வங்கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக்கூறி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் மற்றும் அவர் இயக்குநராக உள்ள நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டது.